June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி.

1 min read

Drug awareness rally in Denkasi.

9.10.2024
தென்காசி மாவட்டம், குற்றாலம் ரோட்டரி கிளப் மற்றும் தென்காசி மாவட்டம் தென்காசி ஐசிஐ அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி,செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நடத்தும் நாட்டு நலபணித்திட்ட சிறப்பு முகாம் துவக்க விழா நடைபெற்றது .
நாட்டு நலப்பணித்திட்ட முகாமின் முதல் நிகழ்வாக போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. இப்பேரணியை தென்காசி‌ மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தலைமையேற்று தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர் , துணைத்தலைவர் கே.என்.எல்.சுப்பையா மற்றும் குற்றாலம் ரோட்டரி சங்க த்தலைவர் கை.முருகன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

அதனைத்தொடர்ந்து தென்காசி ரோட்டரி கிளப் மகாலில் வைத்து நடைபெற்ற துவக்க விழாவில் குற்றாலம் ரோட்டரி சங்கத்தலைவர் கை.முருகன்., ரோட்டரி நிர்வாகிகள் அழகராஜா,துணைஆளுநர் சுரேஷ், கை.கணேசமூர்த்தி இலஞ்சி குமரன், சந்திரன், கார்த்திக்குமார் சைரஸ், பிரகாஷ், கண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

மேலும் செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர் குமார்.தென்காசி காவல்துறை உதவி ஆய்வாளர் முருகேஸ்வரி மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.இந்நிகழச்சியை தென்காசி மாவட்ட நலத்திட்ட தொடர்பு அலுவலர் வைகுண்ட சாமி மற்றும் செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி திட்ட அலுவலர் முருகன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.