தென்காசி- தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு பேரணி
1 min read
Tenkasi- Right to Information Act Awareness Rally
13.10.2024
தென்காசியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் சார்பாக தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு பேரணி தென்காசி புதிய நீதிமன்ற வளாகத்தில் இருந்து புறப்பட்டு தென்காசி தலைமை அஞ்சலகம் வரை நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் மருதப்பன், சு.வேலுச்சாமி, முருகன் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள் இதில் தென்காசி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை உதவி மாவட்ட அலுவலர் சுரேஷ் ஆனந்த், தென்காசி தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் பிரதீப் குமார் மற்றும் தன்னார்வலர்கள் தென்காசி மாவட்ட அனைத்து நிலை கமாண்டோ படை வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இந்த விழிப்புணர்வு நிகழ்வில் தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் சிறப்பு நிலைய அலுவலர் சு.கணேசன், ஜெயரத்தினகுமார், ஜெயபிரகாஷ் பாபு மற்றும் அனைத்து பணியாளர்கள் கலந்து கொண்டனர்.