ராஜஸ்தானில் பஸ் விபத்து; 8 குழந்தைகள் உள்பட 12 பேர் பலி
1 min read
Bus accident in Rajasthan; 12 people including 8 children died
ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், சுமிபூர் அருகே நேற்று நள்ளிரவில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டது. குவாலியரில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்த ஸ்லீப்பர் கோச் பேருந்து, டெம்போ மீது மோதியது. இதில் டெம்போ தூக்கி வீசப்பட்டது. அதில் இருந்தவர்கள் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் உயிருக்கு போராடினர். பேருந்தின் முன்பகுதியும் சேதமடைந்தது. இந்த விபத்தையடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த கோர விபத்தில் 8 குழந்தைகள் உள்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக பாரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விபத்தை ஏற்படுத்திய பேருந்து பறிமுதல் செய்யப்பட்டது.