June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் அரசு வேளாண்மை கல்லூரி அமைக்க கோரிக்கை

1 min read

Request to set up Government Agriculture College in Tenkasi

30.10.2024
தென்காசி மாவட்டத்தில் வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும் என முன்னாள் தென்காசி மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர்
பொ. சிவபத்மநாதன் தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தை தலைமைச் செயலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்தக் கோரிக்கை மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டம் தென்காசி மாவட்டம் 5 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாகும் மேலும் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை தொட்டு அமைந்துள்ள பசுமை வாய்ந்த விவசாயத்தை நம்பி உள்ள மாவட்டம் ஆகும்

புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டம் என்பதால் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிதாக மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் புதிய காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாவட்ட விளையாட்டு மைதானம் போன்ற பல்வேறு புதிய அறிவிப்புகள் அறிவித்து அதை நமது அரசு நிறைவேற்றி தந்துள்ளது

விரைவில் தென்காசி மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரியும் அமைய இருக்கிறது . கழக தேர்தல் அறிக்கையில் ஆயிரப்பேரியில் அரசு வேளாண்மை கல்லூரி அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது .தற்போது ஆயிரப்பேரியில் உள்ள இடத்தில் ஆயுதப்படை காவல் பயிற்சி நிலையம் அமைய உள்ளது.

தற்போது பாட்டாக்குறிச்சி கிராமத்தில் சர்வே எண் 594/1அரசுக்கு சொந்தமான நிலம் சுமார் 85 ஏக்கர் உள்ளது அந்த இடத்தை நமது அரசு சப்டிவிசன் செய்து சர்வே எண் 594/5 25 ஏக்கர் நிலத்தை விளையாட்டு மைதானத்திற்கும் சுமார் 25 ஏக்கர் நிலத்தை மருத்துவக் கல்லூரிக்கும் ஒதுக்கி உள்ளது .

மீதமுள்ள 35 ஏக்கர் நிலத்தில் சுமார் 10 ஏக்கர் நிலத்தில் மத்திய சிறைச்சாலை அமைவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிசீலனை செய்து வருவதாக தெரிகிறது . அதுபோக சர்வே எண் 594/1 இல் மீதம் 25 ஏக்கர் நிலம் உள்ளது அந்த இடத்தில் வேளாண்மை கல்லூரி அமைத்து தர வேண்டும் என்று அவர் அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வின்போது தென்காசி தெற்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் சுந்தர மகாலிங்கம், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சீவநல்லூர் கோ ‌சாமித்துரை முன்னாள் கடையநல்லூர் ஒன்றிய கழகச் செயலாளர் காசி தர்மம்துரை, திமுக மாவட்ட பிரதிநிதி ஸ்டீபன் சத்யராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் இருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.