தென்காசியில் இளைஞர் எழுச்சி நாள் விழிப்புணர்வு பேரணி
1 min read
Youth Uprising Day awareness rally in Tenkasi
30.10.2024
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு
கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலத்திட்ட நலத்திட்ட அணி மாணவ மாணவிகள் பங்கேற்ற இளைஞர் எழுச்சி நாள் விழிப்புணர்வு பேரணி தென்காசியில் நடைபெற்றது.
உயர்கல்வித்துறை இணை இயக்குனர் அறிவுறுத்தலின்படி கடையநல்லூர் அரசு கல்லூரி முதல்வர் முனைவர விக்டோரியா தங்கம் வழிகாட்டுதலின்படி தென்காசி மாவட்ட நிர்வாகத்துடன் மற்றும் பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் பிறந்த தினத்தை முன்னிட்டு இளைஞர் எழுச்சி நாள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு பேரணி தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முதல் தென்காசி பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலத்திட்ட அணியின் மாணவ மாணவிகள் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர்.பால் மகேஷ் மற்றும் கல்லூரியின் இளையோர் செஞ்சிலுவை சங்கத் திட்ட அலுவலர் முனைவர் சாம்சங் லாரன்ஸ் உட்பட ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவியர் திரளான அளவில் கலந்து கொண்டனர். முடிவில் கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர்.பால் மகேஷ் அனைவருக்கும் நன்றி கூறினார்.