July 5, 2025

Seithi Saral

Tamil News Channel

தமிழக மீனவர்கள் 11 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை இலங்கை கோர்ட்டு உத்தரவு

1 min read

Sri Lanka court orders 2 years imprisonment for 11 fishermen from Tamil Nadu

13.11.2024
தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்ட மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 10-ந்தேதி மீன்பிடிப்பதற்கான அனுமதிச் சீட்டை பெற்று மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இதில் புதுக்கோட்டையைச் சேர்ந்த 15 மீனவர்கள் இலங்கை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட 15 மீனவர்களும், இலங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 11 மீனவர்கள் இரண்டாவது முறையாக எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாகவும் இலங்கை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் 4 மீனவர்களை விடுதலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.