July 10, 2025

Seithi Saral

Tamil News Channel

குற்றாலம் அருகே வாலிபர் வெட்டிக்கொலையில் ஒருவர் கைது

1 min read

Murder of a teenager near Courtalam- One arrested

18.11.2024
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே திருமண பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலி பர் சரமாரியாக வெட் டிக்கொலைசெய்யப்பட்டார். தடுக்க முயன்ற நண்பருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் தொடர்புடைய ஒருவரை போலீசார் கைது செய்தனர் மேலும் சிலரை வலை வீசி தேடி வருகிறார்கள்.

தென்காசி மாவட்டம் குற றாலம் அருகே உள்ள காசிமே ஜர்புரம் முத்துராமலிங்கதேவர் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் பட்டுராஜ் (வயது 29) கேபிள் டி.வி. ஆபரேட்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர்.

அதே பகுதியைச் சேர்த்தவர் பொதிகாசலம் என்பவரது மகன் கணேசன் (வயது 25) கூலி தொழி லாளியான இவர் தற்போது இலஞ்சி குமாரகோவில் அருகே உள்ள வள்ளியூர் பகுதியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலையில் காசிமேஜர்புரத்தில் நடந்த உறவின் ரின் திருமண விழாவை யொட்டி, நேற்று முன்தினம் கணேசன் சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் இரவில்திருமண பேனர் வைப்பது தொடர்பாக பட்டுராஜ், கணேசன் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட் டது. உடனே அக்கம்பக்கத்தி னர் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

அப்போது வீட்டுக்கு சென்ற கணேசன் மேலும் இருவரை அழைத்து கொண்டு கொண்டு அரிவாளுடன் வந்து மீண்டும் பட்டுராஜிடம் தகராறு செய்து அரி வானால் சரமாரியாக வெட் டியுள்ளார்.இதில் தலை கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் டைந்த பட்டுராஜ சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இதனை தடுக்க முயன்ற பட்டுராஜின் நண்பரான காசிமேஜர்புரம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் அருண் ( வயது 21) என்பவருக்கும் கைகளில் அரிவாள் வெட்டு விழுந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குற்றாலம் போலீசார். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். படுகாயமடைந்த அருணை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து குற்றாலம் போலீசார் இறந்த பட்டுராஜின் உடலை போலீசார் கைப் பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து கணேசனை கைது செய்தனர் தலைமறைவான மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேயு வருகின்றனர்.

குற்றாலம் அருகே திருமண பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.