ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புமாறு இந்தியாவிடம் வலியுறுத்துவோம்- முகமது யூனுஸ் பேட்டி
1 min read
We will urge India to send back Sheikh Hasina- Mohammad Yunus interview
18.11.2024
வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து பிரதமர பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவர் இருக்கும் இடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. போராட்டத்தின் போது நடைபெற்ற கொலைக்கு ஷேக் ஹசீனாதான் காரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புமாறு இந்தியாவிடம் வலியுறுத்துவோம் என இடைக்கால அரசு தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து பிரதமர பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவர் இருக்கும் இடம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. போராட்டத்தின் போது நடைபெற்ற கொலைக்கு ஷேக் ஹசீனாதான் காரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்புமாறு இந்தியாவிடம் வலியுறுத்துவோம் என இடைக்கால அரசு தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
இடைக்கால அரசு அமைக்கப்பட்டு 100 நாட்கள் ஆகிறது. இதனைத் தொடர்ந்து முகமது யூனுஸ் அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-
கொல்லப்பட்ட ஒவ்வொருவருக்கும் நீதி கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம். ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்ப இந்தியாவிடம் வலியுறுத்துவோம். போராட்டம் மற்றும் வன்முறையால் உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவரின் தகவலையும் கவனமாக சேகரித்து வருகிறோம். வன்முறையில் காயம் அடைந்தவர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க ஏற்பாது செய்யப்பட்டது. இதில் டாக்காவில் உள்ள 13 மருத்துவமனைகளும் அடங்கும்.
இவ்வாறு முகமது யூனுஸ் தெரிவித்தார்.
ஆகஸ்ட் மாதம் 8-ந்தேதி நடைபெற்ற வன்முறையில் சுமார் 1,500 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 19931 பேர் காயம் அடைந்துள்ளனர்.
முன்னதாக ஷேக் ஹசீனாவை திருப்பு அனுப்பு இந்தியாவிடம் வலியுறுத்தமாட்டோம் என முகமது யூனுஸ் தெரிவித்திருந்தார். தற்போது அந்த முடிவில் இருந்து பின்வாங்கியுள்ளார்.