July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

மாமல்லபுரம் அருகே கார் மோதி 5 பெண்கள் பலி

1 min read

5 women killed in car crash near Mamallapuram

27/11/2024
சென்னை அருகே செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பண்டிதமேடு பகுதி உள்ளது. ஈ.சி.ஆர் சாலை அருகே இப்பகுதி அமைந்துள்ளது.

இந்நிலையில், ஈ.சி.ஆர். சாலையில் பண்டிதமேடு பகுதியில் இன்று மதியம் 5 பெண்கள் மாடு மேய்த்துக்கொண்டிருந்தனர். அப்போது, ஈ.சி.ஆர். சாலையில் அதிவேகமாக வந்த கார், சாலையோரம் அமர்ந்து மாடு மேய்த்துக்கொண்டிருந்த பெண்கள் மீது மோதியது.
இந்த கோர விபத்தில் 5 பெண்களும் தூக்கி வீசப்பட்டனர். இச்சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே 5 பெண்களும் உயிரிழந்தனர்.

விபத்தை ஏற்படுத்திய காரை சுற்றி வளைத்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் காரில் இருந்த நபர்களை பிடித்து சரமாரியாக தாக்கினர். இது குறித்து தகவலறிந்த திருப்போரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.