July 11, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசி: முதியவர் கொலை வழக்கு முன்னாள் ராணுவவீரருக்கு 10 ஆண்டு சிறை

1 min read

Tenkasi: Former army soldier gets 10 years in prison for murdering elderly man

29/11/2024
தென்காசியை அடுத்த மேல மெஞ்ஞானபுரம் ஸ்டார்நகர் பகுதியில் வசித்து வருபவர் கோவிந்தராஜ் என்பவரது மகன் ஏழுமலை (வயது 48) இவர் முன்னாள் ராணுவ வீரர்
இவருக்கும் இவரது மனைவி கலா விற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்ப்பட்ட நிலையில் கலா தனது குழந்தைகளுடன் மேலமெஞ்ஞானபுரம் அண்ணா தெருவில் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 6.2.2022 அன்று ஏழுமலை அவரது மனைவி கலா வசித்து வரும் அண்ணாதெரு வீட்டிற்கு வந்து ஹோட்டல் தொழில் செய்ய தங்க நகை வேண்டும் என்று கேட்டு மனைவி கலாவிடம் தகராறு செய்துள்ளார். இதனை பார்த்த அதே அண்ணாதெரு பகுதியில் வசித்து வந்த சாமுவேல் துரைப்பாண்டி (வயது 72) என்ற முதியவர் இருவரையும் சமாதானம் செய்துள்ளார்.

அப்போது ஆத்திரம் அடைந்த ஏழுமலை அருகில் கிடந்த கட்டையை எடுத்து சாமுவேல் துரைப்பாண்டியை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த சாமுவேல் துரைப்பாண்டி சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் .சில தினங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் சாமுவேல் துரைப்பாண்டி உயிரிழந்தார்.
இது தொடர்பாக குற்றாலம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர்.

இந்த வழக்கு தென்காசி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன் றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மனோஜ் குமார், ஏழுமலைக்கு 10 ஆண்டு சிறைதண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு சார்பில் வழக்கறிஞர் சு.வேலுச்சாமி ஆஜராகி வாதாடினார்.

இந்த வழக்கில் உரிய முறையில் விசாரணை நடத்தி சாட்சிகளை விரைந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத்தந்த குற்றாலம் காவல்துறையினருக்கு தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வி ஆர் ஸ்ரீனிவாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.