July 5, 2025

Seithi Saral

Tamil News Channel

எச்.ராஜாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை- மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவிப்பு

1 min read

H. Raja sentenced to 6 months in prison – Announcement of appeal

2.12.2024
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச். ராஜா கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெரியார் சிலையை உடைப்பேன் என்று டுவிட்டரில் பதிவு செய்தது தொடர்பாகவும், தி.மு.க. எம்.பி. கனிமொழிக்கு எதிராக தரக்குறைவாக கருத்து கூறியதாகவும் பல்வேறு காவல் நிலையங்களில் தி.மு.க, காங்கிரஸ், பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டிருந்தன.
இந்த புகாரில் ஈரோடு நகர் காவல் துறை, கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் ராஜாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி எச். ராஜா தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட்டு, மூன்று மாதங்களில் இரண்டு வழக்கின் விசாரணையையும் முடிக்க சென்னை எம்.பி., எம்.எல்.ஏ. மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயவேல் முன் நடைபெற்றது. அப்போது பெரியார் சிலை உடைக்க வேண்டும் என கூறியதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்படவில்லை என்றும், எம்.பி. கனிமொழி மீதான கருத்து அரசியல் ரீதியான கருத்து என்றும், அதிலும் அவர் புகார் அளிக்காத நிலையில், மூன்றாம் நபர் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்று எச்.ராஜா தரப்பில் வாதிடப்பட்டது. .
பின்னர் இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்தநிலையில் வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அவதூறு கருத்துகளை பதிவிட்ட வழக்கில் எச். ராஜாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை எம்.பி,., எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் எச். ராஜா மீதான புகார்கள் காவல்துறை சார்பில் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி இரண்டு வழக்குகளிலும் தனித்தனியாக 6 மாதங்கள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த சூழலில் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டநிலையில் அது நிறுத்தி வைக்கப்படுவதாக பின்னர் அறிவிக்கப்பட்டது. எச்.ராஜா தரப்பில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை 30 நாட்கள் நிறுத்தி வைப்பதாக கோர்ட்டு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் 6 மாத சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக எச்.ராஜா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என் மீதான வழக்குகள் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. சிறைத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும். சிந்தாந்த ரீதியிலான எதிரிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும்” என்று ஹெச்.ராஜா கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.