வள்ளலாரை தாண்டி பெரியார் செய்த சமூக சீர்திருத்தம் என்ன? சீமான் கேள்வி
1 min read
What social reforms did Periyar do beyond Vallalar? Seeman asks
9.1.2025
புதுச்சேரியில் செய்தியாளர் சந்திப்பில் சீமான் கூறியதாவது:-
தமிழர்…தமிழர்கள் என்று பேசினால் எதிரியா?..யார் திராவிடம். நான் யாருக்கும் அடிமையில்லை எனக்கு யாரும் அடிமையில்லை. திராவிடம் பேசி, எங்களை ஒழித்துவிட்டார்கள். தமிழை சனியன் என்று பேசியவர் பெரியார். இஸ்லாமியர்கள் வேறு நாட்டவர்கள் என பெரியார் சொல்லியிருக்கிறார். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் எதிரியா?
எல்லா தேசிய இனத்திற்கும் வரலாறு, பண்பாடு தருவது மொழி தான். வள்ளலாரை தாண்டி பெரியார் செய்த சமூகச் சீர்திருத்தம் என்ன? அம்பேத்கர், ஈ.வெ.ரா.,வை ஒன்றாக வைப்பது, ஒப்பிடுவது எப்படி சரியாகும்? காலத்திற்கு ஏற்றது போல் மாற வேண்டும். பெரியார் குறித்த பேச்சுக்கு ஆதாரம் கேட்கிறார்கள்.பெரியார் குறித்து கலைஞர் எழுதிய புத்தகங்களை அரசுடமையாக்கி வைத்துக் கொண்டு ஆதாரம் கேட்கின்றனர். திராவிடம் குறித்த தெளிவு இல்லாமல் பெரியாரை ஆதரித்து பேசி வந்தேன், தற்போது தெளிவு வந்துவிட்டது.