குளித்தலை அருகே ஜல்லிக்கட்டு போட்டியை வேடிக்கை பார்த்தவர் மாடு முட்டி சாவு
1 min read
Man killed after being gored by cow while watching Jallikattu match near Kulithalai
16.1.2025
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இராட்சண்டர்திருமலை ஜல்லிக்கட்டு போட்டியை வேடிக்கை பார்த்து வந்த குழந்தைவேல் (67) என்பவர் மீது மாடு முட்டியுள்ளது.
இதனையடுத்து படுகாயமடைந்த குழந்தைவேல் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
அதேபோல், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே செந்தாரப்பட்டியில் எருதாட்டம் நிகழ்ச்சியில் காளை முட்டியதில் சாலையோரம் நடந்து சென்ற தொழிலாளி மணிவேல் (43) என்பவர் உயிரிழந்தார்