July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் குடியரசு தின விழா- கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்

1 min read

Republic Day celebrations in Tenkasi – Collector hoists the national flag

26.1.2025
தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் 76வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டது. தென்காசி ஐ.சி;.ஐ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் முன்னிலை வகித்தார். சுதந்திர போராட்ட வீரர் தியாகி முன்னாள் அரசு செயலாளர் லட்சுமிகாந்தன் பாரதி, அமர்சேவா சங்க நிறுவன தலைவர் ராமகிருஷ்ணன், ஆகியோருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

அதனைத் தொடர்ந்து
சமாதான புறாக்கள், தேசிய கொடி வண்ணத்தில் பலூன்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பறக்க விட்டனர். காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆளிநகர்களுக்கு தமிழக முதலமைச்சரின் காவலர் பதக்கங்களையும், சிறப்பாக பணியாற்றிய அரசு பணியாளர்களுக்கு நற்சான்றிதழ் களையும் 318 பேருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வழங்கினார். 49 பேருக்கு பரிசுகள், விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 5 பேருக்கும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் இருவருக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் சார்பில் 4 பேருக்கும் ஆக மொத்தம் 11 பேருக்கு ரூ.5,19,510 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த விழாவில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார், ஏடிஎஸ்பி வேணுகோபால், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அனிதா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மதி இந்திரா பிரியதர்ஷினி, துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) ஷேக் அயூப், தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி, மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் ஆயிரப்பேரி தி.உதயகிருஷ்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் டி.எஸ்.ஆர். வேங்கடரமணா, மாவட்ட வருவாய் அலுவலர் சீனிவாசன், கோட்டாட்சித் தலைவர் லாவண்யா, டிஎஸ்பி தமிழ் இனியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணேசன், மாரியப்பன் டாக்டர் முத்துராமன் மற்றும் அனைத்து அரசு துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.