தமிழக அஞ்சலகங்களில் பாஸ்போர்ட் விண்ணப்பம் மற்றும் பல்வேறு சேவைகள்
1 min read
Passport application and various services at Tamil Nadu post offices
29/1/2025
தமிழகத்தில் அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் பாஸ்போர்ட் விண்ணப்பித்தல் மற்றும் பாஸ்போர்ட் புதுப்பித்தல் ஆதார் அட்டை புதுப்பித்தல் மற்றும் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கோவில்பட்டி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் செ.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இது பற்றி தென்காசியில் கோவில்பட்டி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் செ. சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் அனைத்து அஞ்சல் அலுவகலங்களிலும் சி.எஸ்.சி.என்ற சேவை மூலம். புதியதாக பாஸ்போர்ட் விண்ணப்பித்தல் மற்றும் பாஸ்போர்ட் புதுப்பித்தல் போன்றவற்றிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து தரப்படும். இந்த சேவையினை பெற 10 ம் வகுப்பு அல்லது +2 மதிப்பெண் சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை, மற்றுமொரு முகவரி சான்று (ஆதார் அட்டையில் உள்ளபடி) ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள அஞ்சலகத்தை அணுகவும். இந்த சேவைக்கான கட்டணம் 36 பக்கங்களுக்கு Rs.1500/- 60 பக்கங்களுக்கு Rs.2000/- மற்றும் சேவை கட்டணம் Rs.100/-.மட்டும் வசூலிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் போது கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். விண்ணப்பித்த பின் எந்த தேதியில் பாஸ்போர்ட் அலுவலகத்தை அணுக வேண்டும் என்கிற விபரம் தெரிவிக்கப்படும். அந்த குறிப்பிட்ட தேதியில் உரிய ஆவணங்களுடன் பாஸ்போர்ட் அலுவலகத்தை அணுகி தங்களுடைய சேவையை பெற்றுக்கொள்ளலாம்.
இதனை தவிர, மின்சார கட்டணம் செலுத்துதல், எல்ஐசி பாலிசி / பிற தனியார் இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்துதல், பான்கார்டு விண்ணப்பித்தல். மொபைல் ரீசார்ஜ், லேண்ட் லைன் கட்டணம், பிராட் பேண்ட் கட்டணம், DTH ரீசார்ஜ், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம். ஜீவன்பிரமான் ஓய்வூதியர்சான்று தேசிய ஓய்வூதியதிட்டம் (என்பிஎஸ்) போன்ற சேவைகளையும் அனைத்து அஞ்சல் அலுவகலங்களிலும் சி.எஸ்.சி. என்ற சேவை மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு பொதுமக்கள் தங்கள் அருகிலுள்ள அஞ்சலகத்தை அணுகவும். அஞ்சல் துறையின் இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர்
செ. சுரேஷ் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.