கோவில்களில் வி.ஐ.பி. தரிசன முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி
1 min read
Case seeking cancellation of VIP darshan system in temples dismissed
1.2.2025
கோவில்களில் பின்பற்றப்பட்டு வரும் வி.ஐ.பி. தரிசன முறை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரி விஜய் கிஷோர் கோஸ்வாமி என்பவர் சுப்ரீம் கோர்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுபோன்ற உத்தரவை பிறப்பிக்க முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இது தொடர்பாக மாநில அரசுகள் உரிய முடிவை எடுக்கலாம் என்றும் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தவிட்டனர்.