June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் பிரதமர் மோடி

1 min read

Prime Minister Modi took a holy dip at Triveni Sangam during Maha Kumbh Mela

5.2.2025
உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 14ம் தேதி தொடங்கிய கும்பமேளா வரும் 26ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. கும்பமேளா நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.

பொது மக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் புனித நீராடி வருகின்றனர். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புனித நீராடினார்.

இந்நிலையில் பிரதமர் மோடி பிரயாக்ராஜ் நகருக்கு இன்று வருகை தந்தார். காலை 11 மணியளவில் திரிவேணி சங்கமத்திற்கு வந்த பிரதமர் மோடி அங்கு புனித நீராடினார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியதன் மூலம் தெய்வீக உணர்வை பெற்றேன். இங்கு வந்ததை பாக்கியமாக கருதுகிறேன்.

கோடிக்கணக்கான மக்களைப் போல் நானும் பக்தி உணர்வால் நிறைந்தேன். கங்கை தாய் அனைவருக்கும் அமைதி, அறிவு, நல்ல ஆரோக்கியம், நல்லிணக்க உணர்வை கொடுக்கட்டும்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் வருகையை முன்னிட்டு அப்பகுதியில் போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.