தென்காசி கோவில் முன்பு தடுப்பு வேலி அமைக்க கடும் எதிர்ப்பு- இந்து அமைப்பினர் உள்ளிருப்பு போராட்டம்
1 min read
Strong opposition to construction of a barrier fence in front of the Tenkasi temple – Hindu organizations hold sit-in protest
7.2.2025
தென்காசி காசிவிஸ்வநாத சுவாமி கோவில் முன்பு தடுப்பு கம்பி வேலி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பாஜ. மற்றும் இந்து அமைப்புகள் கோயிலுக்குள் சென்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் அவர்களிடம் கோட்டாட்சி தலைவர் மற்றும் குற்றாலம் கோவில் உதவி ஆணையர் ஆகியோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் சுமார் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இக்கோவிலில் வரும் ஏப்.7ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கோவில் நிர்வாகம் சார்பில் ராஜகோபுரம் படிக்கட்டு அருகே அமைந்துள்ள யானைகள் சிலைகள் உள்ள இடத்தில் இருபுறமும் ₹12 லட்சம் மதிப்பில் தடுப்பு கம்பி வேலி அமைக்கும் பணியானது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து தெரியவந்ததும் ஆவேசமடைந்த பாஜக இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்பினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் விஸ்வ ஹிந்து பரிஷத் கோவில் திருமடங்கள் பாதுகாப்பு பேரவை மாநில தலைவர் சரவணக்கார்த்திகேயன், தளவாய், கார்த்திக், பாஜ மாவட்ட துணைத்தலைவர் முத்துக்குமார். நகர தலை வர் மந்திரமூர்த்தி, உன் னாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட துணைத்தலைவர் ராஜ்குமார். கருப்பசாமி, ஒன்றிய அரசின் நலத்திட்ட பிரிவு மாவட்ட துணைத் தலைவர் சங்கரசுப்பிரமணி யன், கவுன்சிலர் மகேஸ்வரன், வெங்கடேஷ். ஈஸ்வரன், சண்முககுமார், முத்துராஜ், சண்முகராஜ், இந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவர் இசக் நிமுத்து, நகர தலைவர் லட்சுமி நாராயணன், சபரிமணி, இந்து ஆலய பாது காப்பு இயக்க மாவட்டத் தலைவர் சிவபாலசுப்பிரம் ணியன் மற்றும் பஜ்ரதங்கள், ஆலய சொத்து மீட்பு குழு சிவனடியார்கள் நூற் றுக்கும் மேற்பட்டோர் தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் வளாகத்தில் நேற்று காலை போராட்டம் நடத்த குவிந்தனர்.
அப்போது அவர்களிடம் டிஎஸ்பி மீனாட்சிசுந்தரம், செங்கோட்டை இன்ஸ்பெக் டர் பாலமுருகன் ஆகியோர் பேச் சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாரின் தடையை மீறி கோயிலுக்குள் செல்ல முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர் ஆனாலும் அவர்கள் கோயிலுக்குள் செல்வது எங்களது தனிப்பட்ட உரிமை, இதனை தடுக்கக்கூடாது என்று கூறி கோயிலுக்குள் நுழைந்தனர்.
அதனைத் தொடர்ந்து அனைவரும் செயல் அலுவலர் அலுவலகம் முன்பு அமர்ந்து, கோயில் நுழைவுப் பகுதியில் தடுப்பு கம்பி வேலி அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். கோவில் செயல் அலுவ லரை பணியிடமாற்றம் செய்ய வேண்டுமென்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இந்து சமய அறநிலையத்துறை குற்றால நாதசுவாமி கோயில் உதவி ஆணையர் யக்ஞ நாராயணன் பேச்சுவார்த்தை நடத்தி, ஆர்டிஓ தலைமையில் சமாதான கூட்டம் நடைபெறும் என உறுதியளித்தார்.
இந்த போராட்டத்தின் விளைவாக கோவில் வாசல் முன்பு அமைக்கப்பட இருந்த கம்பி வேலி கேட் அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், கும்பாபிஷேக பணிகளில் அதிக அளவில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் செயல் அலுவலர் முருகன் இடமாற்றம் செய்ய சம்பந்தப்பட்ட துறைக்கு ஆவண செய்யுமாறும், விசாரணை நடத்துமாறும் முன்வைத்த நமது கோரிக்கையினை ஏற்று மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளதாகவும்,
அதனை ஏற்றுக்கொண்ட இந்து அமைப்பினர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது.