தென்காசி அருகே வடமாநில தொழிலாளியை குத்திக்கொன்ற நண்பர்
1 min read
A friend stabbed a worker from the northern state near Tenkasi
9.2.2025
தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டி போலீஸ் சரகம் புன்னையாபுரம் ரைஸ் மில்லில் ஏற்பட்ட தகராறில் வடமாநில தொழிலாளியை கத்தியால் குத்திக்கொலை செய்த வழக்கில் மற்றொரு தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டி போலீஸ் சரகம் புன்னையாபுரம் முந்தல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ரைஸ் மில் உள்ளது. இந்த ரைஸ் மில்லில் டெல்லி லாலாபாக் பகுதியைச் சேர்ந்த சங்கர் சரோஜ் என்பவரது மகன் அணிகேட் (வயது 25) என்பவரும், டெல்லி சாலிமார் பேக், லோகியா கேம்ப் பகு தியை சேர்ந்த நல்லா சரோஜ் மகன் உபேந்தர் (வயது 24) என்பவரும் தஞ்சாவூரைச் சேர்ந்த ஏஜென்ட் மூலம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில் இருவருக்கும் வேலை பார்ப்பதில் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவில் வழக்கம் போல் இருவரும் வேலையை முடித்து விட்டு ரைஸ்மில் அருகே தங்கும் விடுதியில் இரவு சமையல் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ரைஸ் மில்லிலும் ஒழுங்காக வேலை செய்வதில்லை, அறைக்கு வந்தும் சமையல் செய்யாமல் தூங்குகிறாயா? என கேட்டு அணிகேட்டிடம் தகராறில் ஈடுபட்டார் உபேந்தர். அது கைகலப்பாக மாறவே ஆத்திரமடைத்த உபேந்தர், காய்கறிகளை வெட்டுவதற்காக வைத்திருந்த கத்தியை எடுத்து அணிகேட்டின் மார்பில் சரமாரி யாககுத்திவிட்டு தப்பி ஓடினார். இதில் ரத்தம் பீறிட்டு சம்பவ இடத்திலேயே அணிகேட் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த சொக்கம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அணிகேட்டின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் தொடர்ந்து சொக் கம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பிச்செல்ல முயன்ற பேந் தரை பாம்பு கோயில் சந்தை ரயில் நிலை யத்தில் வைத்து கைது செய்தனர்.