July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

வீரகேரளம்புதூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்- ஆட்சியர் பங்கேற்பு

1 min read

Looking for you in your town project in Veerakerelambudur – Collector participation

20.2.2025
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டப்படி பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர். களஆய்வு மேற்கொண்டார்கள்.

அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து, உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இன்று (19.02.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், இஆப அவர்கள் தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பரங்குன்றாபுரத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 285 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும். அங்கன்வாடி மையத்தினை பார்வையிட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினையும், வருகைப் பதிவேட்டினையும், அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், இ-சேவை மையத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு அலுவலகத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும். தென்காசி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதிரூ10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய நியாய விலைக்கடை கட்டிடத்தினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து. அச்சன்குட்டம் ஊராட்சி லெட்சுமிபுரத்தில் நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பாமாயில், சீனி, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் இருப்புகளையும், தரத்தினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கோப்பினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும். திடக்கழிவு மேலாண்மையினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும். கிராம நிர்வாக அலுவலகத்தில் கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும். 15 வது நிதிக்குழு மானியத்திட்டம் 2024. 2025 இன் கீழ் 36 ஆயிரம் மதிப்பீட்டில் இந்திரா காந்தி தெருவில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையினையும், ஊரக வீடு பழுது பார்க்கும் திட்டத்தின் கீழ் பழுது பார்க்கப்பட்டுள்ள வீடுகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், கருவந்தா ஊராட்சி சோலைசேரி கிராமத்தில் டிடிடிஏ நடுநிலைப்பள்ளியில் குழந்தைகளின் கல்வித்திறன் குறித்தும், அடிப்படை வசதிகள் குறித்தும், மதிய உணவுத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உணவின் தரத்தினையும், மாணவ, மாணவியர்களின் வருகைப்பதிவேடு குறித்து தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டும். ஊராட்சிமன்ற அலுவலகத்தில் கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், பைப்லைன் அமைக்கப்படும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி. பாமாயில், சீனி, பருப்பு ள்ளிட்ட பொருட்களின் இருப்புகளையும், தரத்தினையும், ஊத்துமலை கிராமத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தில் கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு மருந்துகளின் இருப்புகள் மற்றும் வருகைப்பதிவேடுகள் குறித்தும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கேட்டறிந்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் .ஏ.கே.கமல் கிஷோர் ஆய்வுக்கு பிறகு தெரிவித்ததாவது:-

அனைத்து திட்டங்களும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து. இன்று முழுவதும் வீரகேரளம்புதூர் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு அலுவலகங்கள் ஆய்வு மேற்கொள்ளப்படுவதோடு, வீரகேரளம்புதூர் வட்டம் மற்றும் கிராமத்தில் உள்ள சேனைத்தலைவர் திருமண மண்டபத்தில் வைத்து பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு முறையான கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் சீ.ஜெயச்சந்திரன். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்ணான்டோ, தென்காசி வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா, வீரகேரளம்புதூர் வட்டாட்சியர் சுடலைமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கல்யாண ராமசுப்பிரமணியன்,அலிஸ் தாயம்மாள் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.