மார்ச் 4-ம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
1 min read
Local holiday for Tenkasi district on March 4th
24.2.2025
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர் அய்யா வைகுண்டர். அவர் வழியை பின்பற்றும் மக்கள், அவரை சிவன் பிரம்மா விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் ஒருங்கிணைந்த அவதாரமாக கருதி வழிபட்டு வருகின்றனர். குறிப்பாக, தென் மாவட்டங்களை சேர்ந்த பெரும்பாலான மக்கள் அவரை வழிபட்டு வருகின்றனர்.
வைகுண்டரின் பிறந்த தினத்தன்று, அவரை வழிபடும் மக்கள், அந்தந்த பகுதிகளில் ஊர்வலம் செல்வது வழக்கம். அவரின் அவதார தினத்தைக் கொண்டாடும் வகையிலும், பக்தர்களின் வசதியையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டும் தென் மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தின விழாவை முன்னிட்டு வருகிற மார்ச் 4-ம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் அறிவித்துள்ளார். மேலும், பள்ளி, கல்லூரிகளில் பொதுத் தேர்வு நடைபெற்றால் விடுமுறை பொருந்தாது என்று தெரிவித்துள்ளார். இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில் (மார்ச் 15) சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.