தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்காக மாநாட்டுக்கு தாமதமாக வந்த மோடி
1 min read
Modi arrives late for conference for exam-going students
24.2.2025
மத்திய பிரதேச மாநிலத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடி அம்மாநிலத்தின் போபாலில் நடைபெறும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். இன்று காலை தொடங்கிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள ஏற்கனவே திட்டமிட்டதை விட சற்று கால தாமதம் ஆனது.
இதையடுத்து, மாநாட்டில் தனது உரையை தொடங்கிய பிரதமர் மோடி முதலில் தாமதமாக வந்ததற்கு தன்னை மன்னிக்குமாறு கேட்டார். தொடர்ந்து பேசிய அவர், தான் தாமதமாக வந்ததற்கான காரணத்தை விளக்கி கூறினார்.
அப்போது பேசிய அவர், “இங்கு வந்ததும் மாநிலத்தில் தேர்வுகள் நடைபெற இருப்பதும், மாணவர்கள் அதில் பங்கேற்க செல்லும் நேரமும், நான் ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியே வரும் நேரமும் ஒன்றாக இருந்தது. ஒரே நேரமாக இருப்பதால், நாம் வெளியே வந்தால், போக்குவரத்து மாற்றங்களால் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு செல்வதில் தாமதம் ஏற்படலாம்.
இதன் காரணமாக ஆளுநர் மாளிகையில் இருந்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை தாமதமாக புறப்படுவது என முடிவு செய்தேன். இதனால் தான் நான் இங்கு வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டது. தாமதமானதால் ஏற்பட்ட இடையூறுக்கு மீண்டும் உங்கள் அனைவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்,”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மாநாட்டில் பிரதமா் மோடி மேம் பேசியதாவது:-
இந்திய வரலாற்றில் முதல்முறையாக, முழு உலகமும் இந்தியாவைப் பற்றி மிகவும் நம்பிக்கையுடன் இருக்கும்போது இதுபோன்ற ஒரு வாய்ப்பு வந்துள்ளது. சாதாரண மக்களாக இருந்தாலும் சரி, பொருளாதார கொள்கை வல்லுனர்களாக இருந்தாலும் சரி, பல்வேறு நாடுகளாக இருந்தாலும் சரி, நிறுவனங்களாக இருந்தாலும் சரி, அனைவருக்கும் இந்தியாவிடம் இருந்து பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளன.
வரும் ஆண்டுகளில் உலகின் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா தொடர்ந்து இருக்கும் என்று உலக வங்கி சமீபத்தில் தெரிவித்தது. உலகளாவிய விண்வெளி நிறுவனங்களுக்கான சிறந்த வினியோகமாக இந்தியா வளர்ந்து வருகிறது.
ஜவுளி, சுற்றுலா மற்றும் தொழில்நுட்ப துறைகள் வரும் ஆண்டுகளில் கோடிக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
மத்திய பிரதேசம் முதலீட்டாளர்களுக்கு சிறந்த வருமானத்திற்கான வாய்ப்புகளை வழங்குகிறது. வலுவான திறமையாளர்கள் குழு மற்றும் செழிப்பான தொழில்களுடன் மத்திய பிரதேசம் ஒரு விருப்பமான வணிக இடமாக மாறி வருகிறது.
இந்தியாவின் மின்சார வாகன புரட்சியில் மத்திய பிரதேசம் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகும். மத்திய பிரதேசத்தில் இரட்டை எந்திர அரசாங்கத்துக்கு பிறகு வளர்ச்சியின் வேகம் இரட்டிப்பாகியுள்ளது.
இவ்வாறு மோடி பேசினார்.