June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

8-ந் தேதி தென்காசி ஸ்ரீராம் நல்லமணி கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

1 min read

Private sector employment camp at Sriram Nallamani College, Tenkasi on the 8th

28.2.2025
தென்காசி மாவட்ட நிர்வாகம் மேற்பார்வையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், ஸ்ரீ ராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஸ்ரீ ராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கொடிக்குறிச்சியில் 08.03.2025 அன்று நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்ட நிர்வாகம் மேற்பார்வையில், தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், ஸ்ரீ ராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இணைந்து தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த வேலை தேடும் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஸ்ரீ ராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கொடிக் குறிச்சியில் 08.03.2025 அன்று காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரை நடைபெறவுள்ளது.

தென்காசி மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்களும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட திறன் பயிற்சி நிறுவனங்களும் பங்கேற்க உள்ளனர். இந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் முதுநிலை பட்டதாரி வரை மேலும் பி.இ, டிப்ளமோ, நர்சிங், ஐடிஐ
படித்தவர்கள் அனைவரும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற தனியார்துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் Candidate Login-ல் தங்களது சுயவிவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலையளிப்பவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற தனியார்துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில் Employer Login-o பதிவு செய்து கொள்ள வேண்டும்

இந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தனியார் நிறுவனங்களில் பணியமர்த்தப்படும் பதிவுதாரர்களின் வேலைவாய்ப்பு பதிவுமூப்பு இரத்து செய்யப்பட மாட்டாது. தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த வேலைதேடும் இளைஞர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர்,
தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.