சிறுமிக்கு எதிராக சர்ச்சை பேச்சு- மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதி இடமாற்றம்
1 min read
Controversial speech against the girl – Mayiladuthurai District Collector Mahabharti transferred
28/2/2025
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் அங்கன்வாடிக்கு சென்ற மூன்றரை வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு- கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளது.
கடந்த 24ம் தேதி அங்கன்வாடிக்கு சென்ற சிறுமி 16 வயது சிறுவனால் வன்கொடுமை செய்யப்பட்டு தலை மற்றும் கண் சிதைக்கப்பட்டுள்ளது.
சிறுமி கத்தியதால் கல்லை எடுத்து தலையிலும் முகத்திலும் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த நிலையில் சிறுவன் தப்பியுள்ளான்.
பாதிக்கப்பட்ட சிறுமி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறும் நிலையில் 16 வயது சிறுவன் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டான்.
இந்த நிலையில், சிறுமிக்கு நேர்ந்த இந்த விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மயிலாடுதுறை ஆட்சியர் பேசினார்.
குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஒருநாள் திறன் வளர்ப்பு பயிற்சி முகாமில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, “16 வயது சிறுவனின் முகத்தில் 3 வயது சிறுமி எச்சில் துப்பியது தான் வன்கொடுமைக்கு காரணம்” என மாவட்ட ஆட்சியர் பேசிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியருக்கு கண்டனம் தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது. மேலும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது கண்டனத்தை பதிவு செய்தார்.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ஸ்ரீகாந்த் ஐஏஎஸ் நியமனம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.