June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

ஜப்பானில் தொடர்ந்து மக்கள் தொகை சரிவு-தென்கொரியாவில் அதிகரிப்பு

1 min read

Population decline continues in Japan, increase in South Korea

1.3.2025
ஜப்பானில் மக்கள் தொகை தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. இதையடுத்து குழந்தை பிறப்பை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால் அந்த நாட்டில் தொடர்ந்து 9-வது ஆண்டாக மக்கள் தொகை சரிவை சந்தித்துள்ளது.

கடந்த 2024-ம் ஆண்டில் ஜப்பானில் மொத்தம் 7,20,988 குழந்தைகளே பிறந்ததாக அரசு தெரிவித்துள்ளது. இதனால் குழந்தை பிறப்பை அதிகரிக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் பலன் தரவில்லை என்று ஜப்பான் அரசின் செய்தித் தொடர்பாளர் யோஷிமசா ஹயாஷி தெரிவித்தார். அங்கு திருமண வாழ்க்கை நடைமுறையை இளைஞர்கள் விரும்பாததே குழந்தை பிறப்பு குறைவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது.

தென்கொரியாவில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வந்தது. இதனால் சராசரி குழந்தை பிறப்பு விகிதம் 1 சதவீதத்துக்கும் கீழே குறைந்தது.
எனவே அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள அரசாங்கம் அறிவுறுத்தியது. ஆனால் அதிகரிக்கும் கல்விச்செலவு, கலாசார மாற்றத்தால் இளைஞர்கள் பலரும் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. இது அரசாங்கத்துக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் வகையில் அரசாங்கம் பல்வேறு சலுகைகளை அறிவித்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு சுமார் 2 லட்சத்து 38 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளனர். இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 8 ஆயிரத்து 300 அதிகம் ஆகும். இதன்மூலம் கடந்த 9 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பிறப்பு விகிதம் அதிகரித்திருப்பதாக தென்கொரிய புள்ளிவிவர நிறுவனம் தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.