June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

ஐ.நா.வில் வெடித்த மணிப்பூர் விவகாரம்; இந்தியா கடும் கண்டனம்

1 min read

Manipur issue erupts at UN; India strongly condemns

4.3.2025
காஷ்மீர் மற்றும் மணிப்பூர் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைய தலைவர் வோல்கர் துர்க் தெரிவித்த கருத்துக்களுக்கு இந்தியா கடுமையாக பதிலடி கொடுத்தது. மேலும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு தொடர்ந்து ஆரோக்கியத்துடனும், துடிப்பாகவும், பன்முகத்தன்மை கொண்டதாகவும் இருக்கிறது என தெரிவித்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 58வது கூட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்ற அரிண்டம் பாக்சி, “இந்தியாவின் பெயர் குறிப்பிடப்பட்டு இருப்பதால், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு தொடர்ந்து ஆரோக்கியமாகவும், துடிப்பாகவும், பன்முகத்தன்மை கொண்டதாகவும் உள்ளதை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ஆதாரமற்ற கருத்துக்கள் அடிப்படை உண்மைக்கு முரணாக உள்ளன.”
“இந்திய மக்கள் நம்மைப் பற்றிய இத்தகைய தவறான கருத்துகள் மற்றும் எண்ணங்கள் தவறு என்று பலமுறை நிரூபித்துள்ளனர். மேலும், இந்தியாவையும், நமது பன்முகத்தன்மை மற்றும் நாகரீக நெறிமுறைகளை நன்கு புரிந்துகொள்ள வேண்டும் வலியுறுத்துகிறோம்,” என்று தெரிவித்தார்.

முன்னதாக மணிப்பூர் மற்றும் காஷ்மீர் நிலவரம் குறித்து பேசிய துர்க், வன்முறை மற்றும் மக்கள் இடம்பெயரும் விவகாரத்தில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், இது தொடர்பான முயற்சிகள் பேச்சுவார்த்தை, அமைதியை நிலைநாட்டுவது மற்றும் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து பின்பற்றப்பட வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.