தோரணமலையில் 30-ந் தேதி போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி கருத்தரங்கம்
1 min read
Free training seminar for competitive exams to be held in Thoranamalai on the 30th
22.3.2025
தென்காசி மாவட்டம், கடையம் செல்லும் பாதையில் உள்ள தோரணமலை ஸ்ரீ முருகன் கோவிலில் போட்டித்தேர்வு களுக்கான இலவச பயிற்சி கருத்தரங்கம் 30;ந்தேதி நடைபெறுகிறது. இதில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறும் படி கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.
இதுகுறித்து தோரணமலை ஸ்ரீமுருகன் கோவில் பரம்பரை அறங்காவலர் ஆ. செண்பகராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்காசி – கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை ஸ்ரீ முருகன் கோவிலில் ஆன்மீக பணியுடன் பல்வேறு நலத்திட்ட பணிகள், மற்றும் கல்வி பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தோரணமலை ஸ்ரீமுருகன் கோவில் வளாகத்தில் கோவிலுக்கு வருகை தரும் கிராமப்புற மாணவ, மாணவிகள் அறிவு வளர்ச்சி பெறவும், பல்வேறு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறும் வகையில் கே.ஆதிநாராயணன் – சந்திரலீலா நினைவு நூலகம் அமைக்கப் பட்டுள்ளது. இங்கு சுமார் 3500க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. இங்கு ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
தற்போது கோடை விடுமுறை நாட்களில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு மாதிரி தேர்வுகள், கருத்தரங்கம் போன்றவை நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தோரணமலை ஸ்ரீமுருகன் கோவில் நிர்வாகமும், சென்னை துளிர் ஐ.ஏ.எஸ். அகாடமியும் இணைந்து சப்-இன்ஸ்பெக்டர், டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1,2,4 தேர்வுக்கான இலவச பயிற்சி கருத்தரங்கம் வருகிற 30ந்தேதி (ஞாயிறு) காலை 9;.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறும் படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு பரம்பரை அறங்காவலர் ஆ.செண்கபராமன் கேட்டுக்கொண்டுள்ளார்