உள்ளாட்சி இடைத்தேர்தலை மே மாதம் நடத்த திட்டம்
1 min read
Local government by-elections planned to be held in May
25.3.2025
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம், 2027 வரை இருக்கிறது. அதனால், நகர்ப்புற உள்ளாட்சிகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தி, நிரப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 315 இடங்களுக்கு மே மாதம் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. ஊரக,நகர்ப்புற உள்ளாட்சி இடைத்தேர்தல் ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. சென்னை மாநகராட்சியில் 4 வார்டு கவுன்சிலர் உள்பட 35 மாவட்டங்களில் 133 காலி பதவிகள் உள்ளன.