பீகார் ரெயில் நிலையத்தில் தந்தை-மகளை சுட்டுக் கொன்று, வாலிபர் தற்கொலை
1 min read
Youth commits suicide after shooting father and daughter at railway station in Bihar
26.3.2025
பீகாரில் ரெயில் நிலையத்தில் வைத்து இளம்பெண் மற்றும் அவரது தந்தையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு இளைஞர் ஒருவர் தானும் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலம் போஜ்புர் மாவட்டத்தில் உள்ள ஆரா ரெயில் நிலையத்தில் நேற்று இரவு 7.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 20 வயதான அமன் குமார் முதலில் அப்பெண்ணையும் அதன் பின் அவளது தந்தையையும் ரெயில் நிலையத்தில் நடைமேடைகளுக்குச் செல்லும் ஓவர்பிரிட்ஜ் நடைபாலத்தில் வைத்து தலையில் சுட்டுக்கொன்றார்.
பின் அதே இடத்திலேயே தானும் சுட்டுக்கொண்டு உயிரிழந்தார். இந்த சம்பத்தால் அங்கிருந்த பயணிகள் அதிரிச்சியில் மூழ்கினர். ஆர்பிஎப் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
உயிரிழந்த மூவரும் உத்வாண்ட்நகர் பகுதியை சேர்ந்தவர்கள் என்று விசாரணையில் தெரியவந்தது. பெண்ணின் பெயர் ஜியா குமாரி (18), தந்தையின் பெயர் அனில் சின்கா (50). காதல் விவகாரம் தொடர்பாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அந்த பெண் டெல்லிக்கு செல்வதற்காக ரெயில் நிலையம் வந்திருந்தாக தெரிகிறது.