June 27, 2025

Seithi Saral

Tamil News Channel

பிரதமர் மோடியை மீண்டும் பாராட்டிய சசிதரூர் எம்.பி

1 min read

Shashi Tharoor MP again praises Prime Minister Modi

31.3.2025
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யாக இருப்பவர் சசிதருர். இவர் தனது மனதில் உள்ள கருத்துக்களை கட்சிக்கு அப்பாற்பட்டு மிகவும் வெளிப்படையாக தெரிவிப்பார். இதனால் அவருக்கு காங்கிரஸ் கட்சி யிலேயே கடும் எதிர்ப்பு உள்ளது.

இந்தநிலையில் சமீபகாலமாக பிரதமர் மோடியை பாராட்டி பேசி வருகிறார். அமெரிக்காவில் அதிபர் டிரப்பை பிரதமர் மோடி சந்தித்து பேசியதை பாராட்டினார். அதன் தொடர்ச்சியாக ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் விவகாரத்தில் பிரதமர் மோடியின் செயல்பாட்டையும் பாராட்டினார்.

அது மட்டுமின்றி கேரள மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசையும் பாராட்டினார். சசிதரூரின் இந்த செயல்பாடு காங்கிரஸ் தலைமைக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது. இந்தநிலையில் பிரதமர் மோடியை சசிதரூர் எம்.பி. மீண்டும் பாராட்டியுள்ளார்.

“கோவிட்-19” காலக் கட்டத்தில் பல நாடுகளுக்கு “கோவிட்” தடுப்பூசிகளை வினியோகிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு உதவியதாக கூறியிருக்கும் அவர், அதற்கு பாராட்டும் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து சசிதரூர் எம்.பி. கூறியிருப்ப தாவது:-

“கோவிட்-19” காலத்தில் உலகின் தடுப்பூசி மையமாக இந்திய திகழ்ந்தது. இதனால் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு கணிசமாக உயர்ந்தது. “கோவிட்” தொற்றுநோய் உச்சத்தில் இருந்தபோது வளரும் நாடுகளுக்கு இந்தியா, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை வினியோகம் செய்தது.

சமமான தடுப்பூசி வினியோகத்தை உறுதி செய்வதற்கான உலகளாவிய முயற்சிக்கு இந்திய பங்களித்தது. தொற்றுநோயின் இருண்ட காலத்திலும், உலகளாவிய சுகாதார ராஜ தந்திரத்தில் இந்தியா தனது திறமையை வெளிப்படுத்தியது. நெருக்கடியான நேரங்களில் பல்வேறு நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்டும் இந்தியாவின் திறனை தடுப்பூசி வினியோகம் வெளிப்படுத்தியது.

பணக்கார நாடுகள், தங்களின் சொந்த குடிமக்களுக்காக அதிக அளவிலான தடுப்பூசிகளை சேமித்து வைப்பதற்கு தங்களின் வளங்களை செலவிட்டன. அவற்றில் பெரும்பாலானவை பயன்படுத்தப்படாமல் தூக்கி எறியப்பட வேண்டியிருந்தது. அவை ஏழை நாடுகளுக்கு வினியோகிக்கப்பட்டிருந்தால் உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும்.

இவ்வாறு சசி தரூர் கூறியிருக்கிறார்.

சமீபத்தில் ஒரே மாதத்தில் இரண்டு முறை பிரதமர் மோடியை பாராட்டி சசி தரூர் பேசியிருந்த நிலையில், தற்போது மீண்டும் பிரத மரை பாராட்டியிருக்கிறார். சசிதரூரின் இந்த செயல்பாடு காங்கிரஸ் கட்சியின் தலை மைக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.