July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி ஆராட்டு திருவிழா கொடியேற்றம்

1 min read

Panguni Aaradtu festival flag hoisting at Sabarimala Ayyappa temple

2.4.2025
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் விழாக்களில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

இதையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோவில் நடையை திறந்து விளக்கு ஏற்றினார்.

பின்பு காலை 9.45 மணி முதல் 10.45 மணிக்குள் பங்குனி ஆராட்டு திருவிழா கொடியேற்றம் தந்திரிகள் கண்ட ரரு ராஜீவரரு, பிரம்மதத்தன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து வழக்கமான பூஜைகள் நடைபெற்றது. பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு வருகிற 10-ந்தேதி சரங்குத்தியில் பள்ளி வேட்டை நடைபெறுகிறது.

மறுநாள் (11-ந்தேதி) பகல் 11 மணிக்கு பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு திருவிழா கொடியிறக்கப்படுகிறது. அத்துடன் 10 நாட்கள் ஆராட்டு திருவிழா முடிவடைகிறது.

அதன் தொடர்ச்சியாக சித்திரை விஷூ பண்டிகை மற்றும் மாதாந்திர பூஜை வருவதால் ஆராட்டு திருவிழாவுக்கு பிறகு கோவில் நடை அடைக்கப்படவில்லை. ஏப்ரல் 14-ந்தேதி சித்திரை விஷூ திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தந்திரிகள் மற்றும் மேல் சாந்தி ஆகியோர் நாணயங்களை கைநீட்டம் வழங்கு வார்கள்.

சித்திரை விஷூ மற்றும் மாதாந்திர பூஜை முடிவ டைந்து ஏப்ரல் 18-ந்தேதி கோவில் நடை சாத்தப்படுகிறது. பங்குனி ஆராட்டு திருவிழா மற்றும் சித்திரை விஷூ பண்டிகை அடுத் தடுத்து வருவதால் சபரிமலை ஐயப்பன் கோவில் தொடர்ந்து 18 நாட்கள் திறந்திருக்கும்.

அந்த நாட்களில் தினமும் அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும் என்றும், சித்திரை விஷூ தினத்தில் மட்டும் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப் படும் எனவும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித் துள்ளது.

பக்தர்கள் 18 நாட்களும் வழக்கமாக நடக்கும் பூஜை களில் பங்கேற்று சாமி தரிசனம் செய்யலாம், இரு முடி கட்டு இல்லாமல் வரும் பக்தர்கள் காலை 7 மணி முதல் இரவு 9.30 மணி வரை மட்டும் சாமி தரிச னத்துக்கு அனுமதிக்கப் படுவார்கள் என்றும் தெரி விக்கப்பட்டு இருக்கிறது.

சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் என்ற நடைமுறை கடைபிடிக்கப் படுகிறது. உடனடி சாமி தரிசனத்துக்காக பம்பையில் முன்பதிவு மையங்கள் செயல்படுகின்றன. பங்குனி ஆராட்டு திருவிழா நேற்று தொடங்கியிருப்பதை தொடர்ந்து சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.