போர்ச்சுக்கல் சுற்றுப்பயணம் முடிந்து முரமு இந்தியா திரும்பினார்
1 min read
Muramu returns to India after Portugal tour
12.4.2025
ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாட்கள் அரசுமுறை பயணமாக ஐரோப்பாவுக்கு சென்ற நிலையில், தனி விமானம் மூலமாக முதலில் போர்ச்சுக்கல் நாட்டுக்கு சென்றடைந்தார் .
இந்திய ஜனாதிபதி ஒருவர் போர்ச்சுக்கலுக்கு சென்றது 27 ஆண்டுகளில் இது முதன்முறையாகும். தலைநகர் லிஸ்பனில் அந்த நாட்டின் அதிபர் மார்செலோ ரெபெலோ டி சவுசா, பிரதமர் லூயிஸ் மாண்டினீக்ரோ முதலிய உயர்மட்டத் தலைவர்களுடன் ஜனாதிபதி முர்மு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் .
தனது 2 நாட்கள் பயணத்தை அங்கு முடித்து கொண்டு அடுத்தப்படியாக ஜனாதிபதி முர்மு சுலோவாகியாவுக்கு சென்றார் . இந்த பயணங்களின்போது இந்தியா-போர்ச்சுகல் மற்றும் சுலோவாகியா இடையே மூலோபாயம், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின .
இந்த நிலையில் போர்ச்சுகல் மற்றும் சுலோவாகியா பயணங்களை முடித்து கொண்டு ஜனாதிபதி முர்மு இன்று நாடு திரும்பினார் அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.