July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

கர்நாடகாவில் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்

1 min read

Truckers strike in Karnataka: Impact in Tamil Nadu

17.4.2025
டீசல் விலை உயர்வு மற்றும் சுங்கசாவடி கட்டண உயர்வை திரும்ப பெறுவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் கடந்த 2 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று 3-வது நாளாக வேலைநிறுத்தம் தொடர்கிறது.

இதனால் கர்நாடக மாநிலத்தில் தண்ணீர், கியாஸ் உள்பட அத்தியாவசிய பணிகள் முடங்கி உள்ளது. இது தொடர்பாக கர்நாடகாவில் முதலமைச்சர் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தியும் எந்த வித உடன்பாடும் இல்லாததால் இன்று முதல் போராட்டத்தை தீவிரப்படுத்துவதாக லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் கர்நாடக மாநிலம் வழியாக வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் தடைபட்டுள்ளது.

இதேபோல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கர்நாடக மாநிலம் வழியாக வட மாநிலங்களுக்கு செல்லும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகளும் செல்ல முடியாமல் கர்நாடக எல்லை பகுதி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தால் தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் இரும்பு தளவாடங்கள், கனிம வளங்கள், முட்டைகள், கறிக்கோழிகள், வெல்லம், கோழித்தீவனம், கயிறு பண்டல்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், சின்டெக்ஸ் டேங்குகள், பி.வி.சி. பைப்புகள், மஞ்சள், ஜவ்வரிசி, ஜவுளி, கல்மாவு, தீப்பெட்டிகள், காய்கறிகள் உள்பட ரூ.200 கோடி மதிப்பிலான பொருட்கள் 2 நாட்களில் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் அதில் தொடர்புடை யவர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.

இதே போல கர்நாடகா வழியாக வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் வெங்காயம், பருப்பு வகைகள், மக்காச்சோளம், கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள், தானிய வகைகள், பூண்டு, எண்ணை வகைககள், தக்காளி, பீட்ரூட், கேரட், முட்டை கோஸ், காலிபிளவர், ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி உள்பட பழ வகைகள், தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உபகரணங்கள், கொண்டு வரப்படுவதும் முற்றிலும் தடை பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் உள்ள காய் கறி மார்க்கெட்டுகள், பழ மார்க்கெட்டுகள், தொழில் நிறுவனங்களுக்கு தேவையான பொருட்கள் வரத்து குறைந்துள்ளது . இதனால் அந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தால் லாரி உரிமையாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதுடன், டிரைவர், கிளீனர்கள் உள்பட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்து தவித்து வருகிறார்கள். எனவே இந்த போராட்டத்தை கர்நாடக அரசு உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பது அனைவரின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்த நிலையில் பேச்சு வார்த்தையின் அடிப்படையில் இன்று இரவு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.