தென்காசி: ஒரே நாளில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
1 min read
4 people arrested under the Goonda Act in a single day in Tenkasi district
25.4.2025
தென்காசி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ். அரவிந்த் ஆகியோரின் அதிரடி நடவடிக்கையாக தொடர்ந்து பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த 4 குற்றவாளிளை ஒரே நாளில் அதிரடியாக குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தென்காசி மாவட்டம், சிவகிரி காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான சிவகிரி மேற்கு ரதவீதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் கவில் குமார் (வயது 25), மானூர் சுப்பையாபுரத்தைச் சேர்ந்த முத்தையா என்பவரது மகன் பொன் பாண்டி (வயது 20), கடையநல்லூர் காவல் நிலைய கஞ்சா வழக்கின் குற்றவாளியான சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் தீபக் (வயது 24) மற்றும் ஆலங்குளம் காவல் சரகத்தில் வழிப்பறி வழக்கின் குற்றவாளியான ஆலங்குளம் இசக்கிமுத்து என்பவரின் மகன் முத்துராமன்(வயது 25) ஆகியோர் மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். அரவிந்த் பரிந்துரையின் பேரில், தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் உத்தரவின் பேரில் மேற்படி நான்கு நபர்களும் ஒரே நாளில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் மற்றும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் ஆகியோரின் அதிரடியான இந்த நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.