செந்தில் பாலாஜி வழக்கு: இருவரைக் காவலில் வைக்க உத்தரவு
1 min read
Senthil Balaji case: Uddhav to remand two people
25/4/2025
செந்தில் பாலாஜி வழக்கில் ஜாமீன் உத்தரவாதம் செலுத்தாத இருவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இவ்வழக்கில் ஜாமீன் உத்தரவாதம் செலுத்தாத இருவரையும் நீதிமன்றக் காவலில் அடைக்க காவல் துறைக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
வழக்கில் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமார் உள்பட 13 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஜெயராஜ் குமார், பழனி ரூ.2 லட்சத்திற்கு ஜாமீன் உத்தரவாதம் தரவில்லை.
மேலும் குற்றப்பத்திரிகையுடன் 5,000 பக்கங்களை கொண்ட ஆவணங்களை காகித வடிவில் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.