மகளிர் உரிமைத்தொகைக்கு ஜூன் முதல் விண்ணப்பிக்கலாம்: மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min read
Women’s entitlement: Applications can be made from June: MK Stalin’s announcement
25.4.2025
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பெயர் விடுபட்டவர்கள் ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம் என்று சட்ட சபையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விடுபட்டவர்கள் விண்ணப்பித்தால் அவர்களுக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் எனவும் முதல் அமைச்சர் அறிவித்துள்ளார்.
மு.க. ஸ்டாலின் மேலும் கூறுகையில், மகளிர் உரிமைத்தொகைக்காக 4-ஆம் கட்டமாக 9 ஆயிரம் இடங்களில் முகாம் நடைபெற உள்ளது. தகுதியான அனைவருக்கும் உரிமை தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 1.14 கோடி பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது” என்றார்.