ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் மறைவிடம் அழிப்பு- துப்பாக்கிகள் பறிமுதல்
1 min read
Terrorist hideout destroyed in Jammu and Kashmir, guns seized
26.4.2025
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றம்சாட்டியது. பாகிஸ்தான் உடனான அனைத்து உறவுகளையும் துண்டித்தது.
இந்தியா சிந்தி நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. பாகிஸ்தான் சிம்லா ஒப்பந்தத்தை சஸ்பெண்ட் செய்துள்ளது. இதற்கிடையே இந்தியா- பாகிஸ்தான் எல்லைக்கோட்டருகே பாகிஸ்தான் வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுக்க எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளை தீவிரமாக தேடும் வேட்டையில் இந்திய ராணுவம் ஈடுபட்டு வருகிறது. பயங்கரவாதிகள் மறைவிடத்தை தாக்கி அழித்து வருகின்றன.
அதனடிப்படையில் குப்வாரா மாவட்டத்தில் செடோரி நலா என்ற காட்டுப்பகுதியில் பயங்கரவாதிகளின் மறைவிடும் இருப்பதாக புலனாய்வுத்துறைக்கு தகவல் கிடைத்தது. புலனாய்வுத்துறை அளித்த தகவலின்படி மச்சில் முகாம் சிறப்பு செயல்பாட்டுக்குழு (SOG), இந்திய ராணுவத்தின் 12ஆவது சிக்லி (SIKHLI) குழுவுடன் இணைந்து பயங்கரவாதிகளின் மறைவிடத்தை கண்டுபிடித்து அழித்தது. மேலும், மறைவிடத்தில் இருந்து ஏ.கே.47 உள்ளிட்ட துப்பாக்கிகள் மற்றும் வெடிப்பொருட்களை கைப்பற்றினர்.