இராயகிரி அருகே பைக்- பஸ் மோதி ஒருவர் பலி
1 min read
One killed in bike-bus collision near Rayagiri
1/5/2025
தென்காசி மாவட்டம், ராயகிரி பகுதியில் பைக் மீது தனியார் பஸ் மோதியதில் பைக்கில் வந்த ஒருவர் சம்பவ இடத்தில் பலியானார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தென்காசி மாவட்டம், சிவகிரி ராஜபாளையம் சாலையில் காருண்யா மருத்துவமனை அருகில்
முன்னாள் சென்ற தனியார் பஸ்ஸை பைக்கில் சென்ற நபர் முந்திச் செல்ல முயன்ற போது தனியார் பஸ் பைக் மீது மோதியது. இதில் தளவாய்புரம் அருகே உள்ள கிழக்கு முகவூர் பகுதியைச் சேர்ந்த விஜயராஜ் நாடார் என்பவரது மகன் கண்ணன் (வயது 23) ராஜபாளையம் அருகே உள்ள முறம்பு வாழ வந்தாள்புரம் பகுதியைச் சார்ந்த ராஜாமணி நாடார் என்பவரது மகன் கணேஷ் குமார் (வயது 29) இருவரும் ஒரு பைக்கில் வந்துள்ளனர்.
அப்போது தனியார் பஸ் மோதியதில் பைக்கில் இருந்த இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் கண்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் கணேஷ்குமார் பலத்த காயங்களுடன் சாலையோரம் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதைப் பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக சிவகிரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த சிவகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்த கணேஷ் குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பலியான கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த சிவகிரி போலீசார் தனியார் பஸ்சை ஒட்டி வந்த டிரைவர் தேவதான பகுதியைச் சார்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 39) என்பவரை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள் இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.