July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்ட பஞ்சாயத்து கூட்டம்

1 min read

Tenkasi District Panchayat Meeting

27.5.2025
தென்காசி மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் தலைமை தங்கினார் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் ஆயிரப்பேரி தி.உதயகிருஷ் ணன், மாவட்ட ஊராட்சி செயலர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கவுன்சிலர்கள் சந்திரலீலா, தேவி, சுதா, பூங்கொடி,சாக்ரடீஸ், சுப் பிரமணியன், மைமூன் பீவி ஆகியோர் பங்கேற்று
தங்களது வார்டு வளர்ச்சி பணிகள் குறித்து பேசினர்.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி செயலர் சுமதி பேசுகையில், தென்காசி மாவட்டத்தில் மிகவும் பின் தங்கிய பகுதியாக குருவி குளம் யூனியன் உள்ளதால் அப்பகுதியை மேம்படுத்து கின்ற வகையில் கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்’ என்றார். இதை அனைத்து உறுப்பினர்களும் ஒரு மனதாக ஏற்றுக் கொண்டனர்.

முன்னதாக குருவிகுளம் அருகே சாயமலை ஊராட்சி ஆராய்ச்சிபட்டி கிராமம் வடக்குத் தெருவில் சிமெண்ட் சாலை அமைப்பது, மேலப்பாவூர் ஊராட்சி சடையப்பபுரம் கிராமத்தில் மக்கள் பயன் பாட்டிற்கு தகன மேடை அமைப்பது, தென்காசி மாவட்ட ஊராட்சி அலு வலகத்தில் 2025 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் மேற்கொண்ட நிர்வாக செலவினங்களை அனுமதிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.