அன்புமணி மீது ராமதாஸ் கடும் காட்டம்- “வளர்த்த கடா மார்பில் பாய்கிறது”
1 min read
Ramadoss lashes out at Anbumani – “The raised goat is flowing in the chest”
29/5/2025
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
- தான் செய்த தவறுகளை மறைத்து பட்டாளி மக்கள் கட்சியினரையும், மக்களையும் திசை திருப்ப அன்புமணி முயற்சி செய்கிறார்.
- கட்சியின் கட்டுப்பாட்டிற்கு களங்கத்தை அன்புமணி ஏற்படுத்தி விட்டார்.
- முகுந்தன் இளைஞரணி தலைவராக்கப்பட்டபோது மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்தது சரியான செயலா?
- அன்புமணி கட்சி வளர்ச்சிக்கு இடையூறாக பல செயல்களை செய்து வருகிறார்.
- அன்புமணி இன்னும் பக்குவப்படவில்லை என பலரும் வருந்தினார்கள்.
- அன்புமணி ராமதாசை 35 வயதில் மத்திய அமைச்சராக்கியது என் தவறு.
- அன்புமணி தான் தவறான ஆட்டத்தை தொடங்கியவர். மேடை நாகரீகம், சபை நாகரீகத்தை கடைபிடிக்காதவர் அன்புமணி.
- மேடை நாகரீகம் இல்லாமல் காலை ஆட்டிக்கொண்டு அன்புமணி இருந்தது சரியா? மைக்கை தூக்கி தலையில் போடுவது போல் அன்புமணி செயல்பட்டார்.
- பொதுவெளியில் அநாகரீகமாக நடந்து கொண்டது யார்?
- 4 சுவற்றிற்குள் பேசி முடிக்க வேண்டியதை நடு வீதிக்கு கொண்டு வந்தது யார்?
- கசப்பான வார்த்தைகளை பதிலாக கொடுக்கும் நிலை எனக்கு ஏற்பட்டுள்ளது.
- எதிர்பாராத வகையில் வளர்த்த கடாவே மார்பில் வீறு கொண்டு பாய்கிறது.
இவ்வாறு வேதனையுடன் கூறினார்.