July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

மாணவியுடன் பேராசிரியர் உல்லாசம்-மிரட்டல் புகார்

1 min read

31.5.2025
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி (27 வயது) ஒருவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண்மை கல்லூரியில் கடந்த 2018-ம் ஆண்டு ஆராய்ச்சி படிப்பு படித்து வந்தார். அந்த மாணவி நேற்று சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீசில் புகார் மனு அளித்துள்ளார்.
அதில், நான் சிதம்பரம் வைப்புச்சாவடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்து பி.எச்.டி. படித்து வந்தேன். அப்போது அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நோயியல் பிரிவில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த ராஜா என்பவர், என்னுடன் பலமுறை உல்லாசத்தில் ஈடுபட்டார். அதை வீடியோவாக எடுத்து வைத்துள்ளார். தற்போது அந்த வீடியோவை வைத்து என்னை மிரட்டி வருகிறார். ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதன்பேரில் உதவி பேராசிரியர் ராஜா மீது சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தமிழரசி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். உதவி பேராசிரியர் மீது கல்லூரி மாணவி பாலியல் புகார் கொடுத்து இருப்பது பேராசிரியர்கள், மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.