தி.மு.க. பொதுக்குழுவில் 27 தீர்மானங்கள் -விவரம்
1 min read
Details of the 27 resolutions passed in the DMK general body meeting
1.6.2025
மதுரையில் இன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
- மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதி தினத்தை செம்மொழி நாளாக நாடெங்கும் கொண்டாடுவோம்.
- தி.மு.க. தலைவராக பொறுப்பேற்றது முதல் எதிர்கொண்ட 2019 பாராளுமன்றத் தேர்தல், 2020 ஊரகஉள்ளாட்சித் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2024 பாராளுமன்றத் தேர்தல், இடைத்தேர்தல்க ளங்கள் என அனைத்திலும் மகத்தான வெற்றியைக் கழகம் பெற்றிடும் வகையில் வியூகத்தை வழங்கி, அந்த வெற்றிக்கு ஓயாது உழைத்திட்டவரும், தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடன் முதலமைச்சர் பொறுப்பை ஏற்று, இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்களைத் தமிழ்நாட்டில் செயல்படுத்தி வருபவருமான கழகத் தலைவர் முதலமைச்சருக்கு பாராட்டு தல்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
மேலும் எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கழகக் கூட்டணி முழுமையான வெற்றிபெற்று, தி.மு.க. தலைவர் தொடர்ந்து முதலமைச்சர் பொறுப்பு ஏற்க நாம் அனைவரும் அயராது உழைப்போம்.
- இந்தியாவுக்கே முன்னோடியாக மகளிர் வாழ்வை மேம்படுத்தும் திராவிட மாடல் அரசு. பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிக்கிறது.
- உழவர்கள்-நெச வாளர்கள்-மீனவர்கள் என அனைத்துத் தரப்பினரின் வாழ்விலும் புதிய விடியல் தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் சாதனை களை மக்களிடம் கொண்டு சேர்க்க பரப்புரை செய்வோம்.
- தமிழினத்திற்குப் பெருமை சேர்த்த தலைவர்களைப் போற்றும் கழக அரசுக்குப் பாராட்டு.
- ஒவ்வொரு குடும்பமும் பயன் பெற்றுள்ள திராவிட மாடல் அரசின் சாதனை திட்டங்களான மகளிர் கட்டணம் இன்றி பஸ்களில் பயணம் செய்யும் விடியல் பயணம் திட்டம்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, மக்களை தேடி மருத்துவம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி, புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட திட்டங்களை தொடர்ந்து மக்களிடம் எடுத்துரைப்போம்.
- தமிழ்நாட்டின் எதிர்கால நம்பிக்கையாக மக்களின் பேராதரவைப் பெற்றுள்ள துணை முதலமைச்சர்-இளம் தலைவன் பணி தொடரத் துணை நிற்போம்!
- ஏழை-எளிய மக்களை வதைக்கும் நகைக் கடன் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி உடனே நீக்க வேண்டும்.
- தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய நிதியைத் தர மறுக்கும் ஒன்றிய அரசுக்குக் கண்டனம். கல்வி நிதி ரூ.2152 கோடி தர வலியுறுத்துவதுடன் வரிப் பகிர்வின் பங்கை 50 சதவீதம் ஆக உயர்த்திட வேண்டும்.
- தமிழர்களின் மொழி உணர்வுடன் விளை யாடாமல் இந்தித் திணிப்பைக் கைவிட வேண்டும்.
- கீழடி ஆய்வை மறுக்கும் தமிழ் விரோத பா.ஜ.க அரசுக்குக் கண்டனம்.
- ரெயில்வே திட்டங்களில் தமிழ் நாட்டைப் புறக்கணிக்கும் பா.ஜ.க அரசுக்கு கண்டனம்.
- சிறுபான்மையினர் உரிமைகளைப் பறிக்கும் நோக்கில் இசுலாமியர் சொத்துக்களைச் சூறை யாடும் வக்பு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்.
- பிரதமர் மோடி தலைமையிலான கடந்த 11 ஆண்டுகள், பா.ஜ.க. ஆட்சியில் மக்களை மத ரீதியாகப் பிளந்து, இந்துத்துவாக் கொள்கையை நடைமுறைப்படுத்தி வருகிறது. ஒரே நாடு-ஒரே தேர்தல், ஒரே ஆட்சி மொழி, ஒரே நுழைவுத் தேர்வு, ஒரே வரி, ஒரே கல்வி என்று ஒன்றிய அரசிடம் அதிகாரத்தைக் குவித்து, மாநிலங்களின் நிதி உரிமை, வரி உரிமை, கல்விஉரிமை உள்ளிட்ட அனைத்தையும் முற்றிலுமாகப் பறித்து, தன்னாட்சி மிக்கபுனலாய்வு அமைப்புகளான சி.பி.ஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ஆகியவற்றை எதிர்க்கட்சிகளைப் பழிவாங்குவதற்கான கைப்பாவைகளாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான நீட் தேர்வு, மதுரைஅரிட்டாப்பட்டி டங்ஸ்டன் திட்டம், மன்னார் வளைகுடா ஆழ்கடலில் எண்ணெய்க் கிணறுகள் அமைத்தல்,
தமிழ்நாட்டின் திட்டங்களுக்குப்போதிய நிதி ஒதுக்காமல் புறக்கணிப்பு எனத் திட்டமிட்ட வஞ்ச கங்களும், ஆளுநர்களை வைத்துப் போட்டி அரசாங்கம் நடத்துதல், அரசியல் எதிரிகள்மீது வெறுப்பு பரப்புரைப் பேச்சுகளை உமிழ்தல், பொய் வழக்குகள் யாய்ச்சுதல், அரசு எந்திரங்களைச் சட்ட மீறலாகப் பயன்படுத்தி மாநிலஅரசுகளுக்கு மிரட்டல் விடுத்தல், ஒன்றிய அரசின் இலஞ்ச-ஊழல்களை ஆதாரத்துடன் எதிர்த்து எழுதும், பேசும் சமூகச் செயற்பாட்டாளர்கள் மீதுபொய் வழக்குகள், சிறை போன்ற அநீதிகளுமே தொடர்வதால், இத்தகைய சர்வாதிகாரப் போக்கை நடத்தி வரும் பா.ஜ.க. அரசுக்கு இப்பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறது.
- மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் தொடரும் அநீதிகளுக்கு கண்டனம்.
- மீனவர்கள் நலன் காக்க கச்சத்தீவை மீட்டிட வேண்டும்.
- சாதிவாரிக் கணக் கெடுப்பை விரைவாகவும் முறையாகவும் நடத்திடுக!
- தமிழ்நாட்டின் பாராளுமன்றப் பிரதிநிதித்து வத்தைக் குறைக்கும் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை கூடாது.
- கவர்னரின் அதி கார வரம்பை வரையறுத்து மாநில உரிமையை நிலை நாட்டிய உச்சநீதிமன்ற தீர்ப்புக்குக் காரணமான கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலி னுக்கு பாராட்டு.
- கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்புக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்த துணை ஜனாதிபதியும் மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தன்கருக்கு பொதுக்குழு வன்மையான கண்டனம் தெரிவிக்கிறது.
- அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காமல் உச்சநீதிமன்றத்தோடு மோதும் பா.ஜ.க அரசுக்குக் கண்டனம்.
- உச்சநீதிமன்றத் தீர்ப்பை முன்வைத்துக் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலில் இணைத்திட வேண்டும்.
- இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் தன் னாட்சி உரிமை பெற்றிட சட்டசபையில் கொண்டு வந்த தீர்மானத்தின் மூலம் மாநில சுயாட்சி கருத்தி யலுக்கு செயல் வடிவம் கொடுத்திட உயர்நிலைக் குழுவை நியமித்த தமிழக அரசுக்கு பாராட்டு.
- காலநிலை மாற்றத்தால் பருவமழை காலங்கள் மாறி வரும் சூழலில் தென்மேற்கு பருவ மழையை எதிர்கொள்ள களத்தில் நிற்கும் முதலமைச்சருக்கும், தமிழக அரசுக்கும், கழக தோழர்கள் உறுதுணையாக நின்று பணிபுரிய வேண்டும்.
- எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என அழகிய தமிழ்ப் பெயர்களை குழந்தைகளுக்கு சூட்டுவோம். வணிகப் பெருமக்கள் தமிழ்நாட்டில் உள்ள கடைகளின் பெயர்ப் பலகைகளில் தமிழில் பெயர் எழுத வேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறது.
- அ.தி.மு.க. ஆட்சியின் அவலமான பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவிப்பதுடன், சென்னையில் மாணவி ஒருவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு 5 மாதங்களில் நீதியை பெற்று தந்த முதலமைச்சருக்கும், தமிழக காவல் துறைக்கும் பொதுக் குழு பாராட்டு தெரிவிக்கி றது.
- எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வஞ்சக பா.ஜ.க.வையும், துரோக அ.தி.மு.க.வையும் முழுமையாக விரட்டிய டித்து, இந்தியாவின் ஜனநாயகக் காவலராம் நம் கழகத் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான நல்லாட்சி தொடர்ந்திட அனைத்துத் தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெறக் கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகளும் இன்று முதல் தேர்தல் பணிகளை விரைவுபடுத்தி, அயராது பாடுபடுவோம். தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் அமர வைக்க பொதுக்குழு சூளுரைக்கிறது.