வீடு புகுந்து கல்லூரி மாணவி கத்தியால் குத்திக் கொலை
1 min read
College student stabbed to death after breaking into house
2.6.2025
பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொள்ளாச்சி அடுத்துள்ள கிராம பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது கல்லூரி மாணவி. சம்பவத்தன்று அவர் வீட்டில் தனியாக இருந்தார். அவரது பெற்றோர் வேலைக்குச் சென்று விட்டனர்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர், மாணவியை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பிச் சென்றார். அலறலை கேட்ட அங்குள்ளோர் உடனடியாக அங்கே சென்றனர். அப்போது ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து கிடப்பதை கண்டனர்.
மாணவியை மீட்ட அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியில் உயிர் பிரிந்துவிட்டதாக கூறினர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், பிரவீன் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அவரிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். வடுகபாளையம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரும், நிதி நிறுவன ஊழியரான பிரவீன் என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர்.
இதற்கிடையே கல்லூரி மாணவி, தனது நண்பர்களுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இது பிரவீனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கேட்டபோது பிரவீனுக்கும், கல்லூரி மாணவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பீரவீன் கொலை செய்ததாக கூறப்படுகிறது.