June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி

1 min read

Youth attempts to set fire to Tenkasi District Collectorate

2.6.2025
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பூவனூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுத்துரை என்பவரது மகன் சுரேஷ் (வயது 36) இவர் கல்லூரணி பகுதியைச் சேர்ந்த சிங்கக்குட்டி என்பவரிடம் 10 வருடங்களுக்கு முன்பு திருமணத்திற்காக ரூபாய் 80,ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். அதற்கு ஈடாக தனக்குச் சொந்தமான ஒன்றரை ஏக்கர் நிலத்தையும் அவருக்கு எழுதிக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் கடன் கொடுத்த சிங்கக்குட்டி இவரிடம் ரூபாய் 80 ஆயிரம் கடனுக்கு வட்டியுடன் சேர்த்து 30 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று கூறி தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிங்கக்குட்டி மற்றும் சிலர் சேர்ந்து சுரேஷை அடித்து உதைத்து அவரது காலை உடைத்துள்ளனர். இது பற்றி சுரேஷ் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் விரக்தி அடைந்த சுரேஷ் இன்று காலையில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் புகார் அளிக்க சுரேஷ் தனது மனைவி மற்றும் மகளுடன் வந்துள்ளார். அப்போது அவர் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்து உள்ளார்.

இதை பார்த்த போலீசார் உடனடியாக அதனை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீர் ஊற்றி உடனடியாக அவரை சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.