சேற்றில் விழுந்த தன்னை காப்பாற்றியதற்காக நன்றி சொன்ன குட்டி யானை
1 min read
Baby elephant thanks those who saved him after falling into the mud
5.6.2025
சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூர் மாவட்டத்தில் சேறு நிறைந்த குழியில் விழுந்த குட்டி யானையை வனத்துறையினரும் உள்ளூர் மக்களும் இணைந்து மீட்டனர்.
குழியில் விழுந்த குட்டி யானையில் அலறல் சத்தத்தை கேட்ட கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் ஜேசிபி உதவியுடன் குழிக்கு பக்கத்தில் ஒரு பாதையை உருவாக்கி யானை மீட்டனர்.
சேற்றில் விழுந்த தன்னை காப்பாற்றியதற்காக ஜேசிபி மீது தும்பிக்கையை வைத்து குட்டி யானை நன்றி கூறியது.
இது தொடர்பான வீடியோவை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.