June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சி பகுதியில் வளர்ச்சிப் பணிகள்- ஆட்சித் தலைவர் ஆய்வு

1 min read

Development works in Sundarapandiyapuram Town Panchayat area – Inspection by the Head of Administration

5.6.2025
தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு துறைகளின் வளர்ச்சித் திட்டங்களை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதன்பின் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் கூறியதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் தென் மாவட்டத்திற்கென பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். பொதுமக்களுக்குத் தேவையான வளர்ச்சித்திட்டங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு சேர்க்க அறிவுறுத்தி உள்ளார்கள். அதனடிப்படையில் இன்றைய தினம் தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் அரசு துவக்கப்பள்ளியில் பள்ளி மாணவ மாணவியர்களின் வருகை குறித்தும், கல்வியின் தரம் குறித்தும், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டும். கிராம நிர்வாக அலுவலகத்தில் கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும்.

நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டும், நியாய விலைக்கடையில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தும். அங்கன்வாடி மையம் கட்டுமானப்பணிகளை ஆய்வு மேற்கொண்டும், நிழற்குடை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும். கால்நடை மருந்தகத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துகளின் இருப்பு மற்றும் தரம், அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும்.

பாட்டாக்குறிச்சி ஊராட்சியில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் உள் விளையாட்டு அரங்கத்தின் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர். தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேஷ் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.