நாகை அதிபத்த நாயனார் கோவில் கும்பாபிஷேகம்
1 min read
Kumbabhishekam at Nagai Adhipattam Nayanar Temple
5.6.2025
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார் நாகை நம்பியார் நகரில் பிறந்தவராவார். மீன் பிடித்தலை தொழிலாக கொண்டிருந்தவர். தன்னுடைய சிவ பக்தியின் காரணமாக தான் பிடிக்கும் மீன்களில் முதல் மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இவரின் பக்தியை சோதிக்க நினைத்தார் சிவபெருமான். அதன்படி அவருக்கு மீன்கள் கிடைப்பது படிப்படியாக குறைந்தது. சில நாட்களில் ஒற்றை மீன் பிடிபட்டாலும், அதனையும் சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்து விட்டு வெறுங்கையுடன் திரும்புவார். இதனால் வறுமையில் வாடினார். ஒரு நாள், ரத்தினங்கள் பதித்த தங்க மீனை வலையில் சிக்குமாறு செய்தார் சிவபெருமான். ஆனால் தீவிர சிவபக்தரான அதிபத்தர் அதனையும் சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்தார்.
அவரின் பக்தியால் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான், பார்வதி தேவியுடன் அதிபத்தருக்கு காட்சி அளித்து அருளினார். இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் நாகை கடற்கரையில் ஆவணி மாதம் ஆயில்ய நட்சத்திர நாளில் கடலில் தங்க மீன் விடும் திருவிழா கொண்டாடப்படுகிறது.
வறுமையில் வாடினாலும் தனக்கு கிடைத்த தங்க மீனை சிவபெருமானுக்கு சமர்ப்பித்த சிறப்புடைய அதிபத்த நாயனாருக்கு நாகை நம்பியார் நகரில் கற்கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதேபோல அங்குள்ள புதிய ஒளி மாரியம்மன் கோவில், கப்பல் விநாயகர் கோவில், ராஜகாளியம்மன் கோவில் ஆகியவையும் புனரமைக்கப்பட்டு வந்தது. இப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேக விழா தொடங்கி யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. யாக சாலை பூஜைகள் முடிந்து, அதிபத்த நாயனார் கற்கோவில் உள்பட அனைத்து கோவில்களுக்கும் இன்று ஒரே அவரின் பக்தியால் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான், பார்வதி தேவியுடன் அதிபத்தருக்கு காட்சி அளித்து அருளினார். இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் நாகை கடற்கரையில் ஆவணி மாதம் ஆயில்ய நட்சத்திர நாளில் கடலில் தங்க மீன் விடும் திருவிழா கொண்டாடப்படுகிறது.
வறுமையில் வாடினாலும் தனக்கு கிடைத்த தங்க மீனை சிவபெருமானுக்கு சமர்ப்பித்த சிறப்புடைய அதிபத்த நாயனாருக்கு நாகை நம்பியார் நகரில் கற்கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அதேபோல அங்குள்ள புதிய ஒளி மாரியம்மன் கோவில், கப்பல் விநாயகர் கோவில், ராஜகாளியம்மன் கோவில் ஆகியவையும் புனரமைக்கப்பட்டு வந்தது. இப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேக விழா தொடங்கி யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தன. யாக சாலை பூஜைகள் முடிந்து, அதிபத்த நாயனார் கற்கோவில் உள்பட அனைத்து கோவில்களுக்கும் இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த விழாவை சிறப்பிக்கும் விதமாகவும், இந்து- இஸ்லாமியர்களின் மத நல்லிணக்க ஒற்றுமையை வலுப்படுத்தும் விதமாகவும் இஸ்லாமியர்கள் சீர்வரிசை கொண்டு வந்தனர். மஞ்சள், குங்குமம், பூ, வெற்றிலை, பாக்கு, தேங்காய், பட்டுச்சேலை, வேஷ்டி உள்ளிட்ட 51 வகையான சீர்வரிசை பொருட்களை தாம்பாளத்தில் வைத்து, வெளிப்பாளையம் ஏழை பிள்ளையார் கோவிலில் இருந்து இஸ்லாமியர்கள் நம்பியார் நகர் புதிய ஒளி மாரியம்மன் கோவில் வரை ஊர்வலமாக வந்தனர்.
பின்னர் நம்பியார் நகர் மீனவர்களிடம் சீர்வரிசை பொருட்களை வழங்கினர். இஸ்லாமியர்களை மகிழ்ச்சியுடன் கோவிலுக்குள் வரவேற்ற மீனவர்கள், அவர்களுக்கு மாலை மற்றும் பட்டு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.