June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

கடையம் அருகே வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் கைது

1 min read

2 arrested for throwing petrol bomb at house near Kadayam

8.6.2025
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள அடைச்சாணி கிராமத்தில் தொழிலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள அடைச்சாணி பகுதியைச் சேர்ந்த சுந்தரம் என்பவரது மகன் ஆறுமுக செல்வம் (வயது 26), கந்தன் என்பவரது மகன் மாரியப்பன் (வயது25) ஆகிய இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடைச்சாணி பகுதிக்கு அடுத்து உள்ள பள்ளக்கால் பொதுக்குடியில் நடந்த கோவில் திருவிழாவுக்கு
சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்றுமுன் தினம் அதிகாலையில் ஆறு முகசெல்வம் வீட்டின் மீது சிலர் பெட்ரோல் குண்டுவீசி வீசி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதனால் வீட்டின் முன்புள்ள இரும்பு கதவில் பெட்ரோல் குண்டு விழுந்து வெடித்து சிதறி தீப் பிடித்தது. உடனே ஆறுமுக செல்வம் மற்றும் அவருடைய குடும்பத்தினர், அக்கம்ஸபக்கத்தினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில், ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத் தினார்.

விசாரணையில், மாரியப்பன் மற்றும் அவருடைய நண்பரான பள்ளக்கால் பொதுக்குடியைச் சேர்ந்த கிருஷ்ணன் ன்பவரது மகன் பொன்ராஜ் (வயது 20) ஆகிய 2 பேர் சேர்ந்து ஆறுமுக செல்வம் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியது தெரிய வந்தது. உடனடியாக
அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார்கள் நீதிபதி அவர்கள் இருவரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார் . இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.