July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

தென்காசி, நீலகிரிக்கு 14, 15-ந் தேதிகளில் ரெட் அலெர்ட்

1 min read

Red alert for Tenkasi and Nilgiris on the 14th and 15th

11.6.2025
தென்காசி, நீலகிரிக்கு வரும் ஜூன் 14, 15 ஆகிய தேதிகளில் அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:

நாளை (ஜூன் 12) மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள்

கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி

ரெட் அலெர்ட்

நீலகிரிக்கு வரும் ஜூன் 14, 15 ஆகிய தேதிகளில் அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

ஜூன் 14ம் தேதி மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:

கோவை மாவட்ட மலைப்பகுதிகள், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்

கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

திருப்பூர், திண்டுக்கல்

ஜூன் 15ம் தேதி மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:

கோவை மாவட்ட மலைப்பகுதிகள், தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், கன்னியாகுமரி

கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
திருப்பூர், திண்டுக்கல், தேனி,

ஜூன் 16ம் தேதி மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள்

கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள், கன்னியாகுமரி

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.