June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

பட்ட பகலில் நடுரோட்டில் தெருகூத்து கலைஞர் வெட்டிக்கொலை

1 min read

Street artist hacked to death in broad daylight

15.6.2025
கிருஷ்ணகிரி மாவட்டம் வரட்டனப்பள்ளி அடுத்த அருகே உள்ள தேசுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 45). கிருஷ்ணகிரியில் தெருகூத்து கலைஞராக உள்ளார். இன்று மதியம் கிருஷ்ணகிரி நகரில் உள்ள ரவுண்டானா பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது திடீரென பின்னே வந்த வேப்பனப்பள்ளியை அடுத்த குருவரெட்டிபோடூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னநரசிம்மன் என்பவர் அவரது கழுத்து மற்றும் முகத்தில் கத்தியால் பலமாக வெட்டி உள்ளார்.

இதில் வெங்கடேசன் படுகாயம் அடைந்த நிலையில் சாலையில் இருசக்கர வாகனத்தில் கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துள்ளார். தகவல் அறிந்து விரைந்த வந்த போலீசார் வெங்கடேசனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தனர்.

இதையடுத்து வெங்கடேசனை கொலை செய்து தப்பி ஓடிச் சென்ற சின்ன நரசிம்மனை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்ட பகலில் நடு ரோட்டில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.